என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஜூலை 2021 வரை அனைத்து நிகழ்வுகளும் இப்படி தான் நடக்கும் - மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு
Byமாலை மலர்8 April 2020 7:46 AM GMT (Updated: 8 April 2020 7:46 AM GMT)
2021 ஜூலை மாதம் வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் இப்படி தான் நடக்கும் என மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க 2020 முதல் பாதியில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்படுவதாகவும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்தும் செல்லும் வகையிலான அறிவிப்பினை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் 2021 ஜூலை வரை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்போருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினை மைக்ரோசாஃப்ட் கூர்ந்து கவனித்து வருகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் கால அட்டவணையை மாற்றியமைத்து வருகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஜூலை 2021 வரை டிஜிட்டல் முறையில் நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X