என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
2019 டிசம்பரில் ஜியோவை முந்தைய பி.எஸ்.என்.எல்.
Byமாலை மலர்26 Feb 2020 11:54 AM GMT (Updated: 26 Feb 2020 11:54 AM GMT)
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2019 டிசம்பரில் ரிலையன்ஸ் ஜியோவை பி.எஸ்.என்.எல். முந்தியிருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பி.எஸ்.என்.எல். ரிலையன்ஸ் ஜியோவை முந்தி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிலையன்ஸ் ஜியோ சேவையில் 82,308 பேர் இணைந்து இருக்கின்றனர்.
எனினும், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4.2 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து இருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் வோடபோன் நிறுவனம் 36 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 11,000 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
முன்னதாக டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களின் விலையை 14 இல் இருந்து 33 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் டெலிகாம் நிறுவனங்கள் மேலும் அதிக வாடிக்கையாளர்களை இழக்கும் என தெரிகிறது.
2019 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தற்சமயம் ஜியோ நெட்வொர்க்கில் 37 கோடி, ஏர்டெல் நெட்வொர்க்கில் 28.3 கோடி மற்றும் வோடபோன் ஐடியா நெட்வொர்க்கில் 30 கோடி வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X