search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணைய சேவை
    X
    இணைய சேவை

    இணைய சேவை முடக்கத்தால் இந்தியாவுக்கு இத்தனை கோடிகள் இழப்பா?

    இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் இந்தியாவுக்கு இத்தனை கோடிகள் இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.



    இந்தியாவில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், டெலிகாம் ஆப்பரேட்டர்களுக்கு ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 2.45 கோடி வீதம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

    மத்திய அரசு சமீப காலங்களில் அடிக்கடி இணைய சேவையை முடக்கி வருகிறது. 2018-ம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக இணைய சேவை முடக்கஙகளை கணக்கிடும் வலைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இணைய சேவை

    இதன் மூலம் ஒட்டுமொத்த இழப்பீடு டெலிகாம் நிறுவனங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொது மக்களிடையே இணைய சேவை இன்றியமையாத ஒன்றாக மாறி வருகிறது. இணைய சேவையின்றி அன்றாட வாழ்வில் பெரும்பாலான பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதுதவிர நாட்டில் பெரும்பாலான சேவைகள் இணையம் சார்ந்து இயங்கி வருகின்றன. ஆன்லைன் சந்தைகள், கால் டாக்சி, உணவு டெலிவரி சேவை உள்ளிட்டவை இவற்றில் முதன்மையான ஒன்றாக இருக்கின்றன. அடிக்கடி இணைய சேவைகள் முடக்கப்படுவதால் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3.67 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்து இருக்கிறார்.

    2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 2012 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 16,000 மணி நேரங்கள் வரை இணைய சேவை முடக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் சுமார் 21,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×