என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பி.எஸ்.என்.எல்.
    X
    பி.எஸ்.என்.எல்.

    பி.எஸ்.என்.எல். தீபாவளி சலுகை - வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் அறிவிப்பு

    பி.எஸ்.என்.எல். நிறுவன லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளியன்று இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.



    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘லேண்ட்லைன்’ மற்றும் ‘பிராட்பேண்ட்’ வாடிக்கையாளர்கள் வரம்பற்ற (அன்லிமிடெட்) அழைப்புகளை செய்யும் வசதியை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

    இதன்படி வாடிக்கையாளர்கள், எந்த ஒரு ‘லேண்ட்லைன்’ மற்றும் செல்போன் எண்கள் வைத்திருக்கும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வரம்பற்ற அழைப்புகளை செய்யலாம். இந்த சலுகை அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    போன் பயன்பாடு - கோப்புப்படம்

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். இயக்குனர் விவேன் பன்சால் கூறும் போது, 

    “எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பும் இந்த வேளையில் பி.எஸ்.என்.எல். ‘லேண்ட்லைன்’ மூலம் சிறந்த அனுபவத்தை அளிக்க விரும்புகிறோம். 

    இதனால் விழாக்காலத்தை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம். எனவே நல்வாழ்த்துகள் என்பது சிறப்பான இணைப்பை கொடுப்பதினாலேயே தெரிவிக்கமுடியும். ‘பாரத் பைபர் சேவை’யின் கீழ் மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் அடுத்த சில மாதங்களில் இணைக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் வழங்கப்படும். ‘பிராட்பேண்ட்’ சேவையில் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட இருக்கிறது''. என தெரிவித்தார்.
    Next Story
    ×