என் மலர்
தொழில்நுட்பம்

பயனர் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் கூகுள்
கூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க புதிய அம்சங்களை அறிமுகம் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்லைன் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
தனியுரிமை ஆடம்பரமாக இருக்கக் கூடாது, அது உலகம் முழுக்க அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு அதிகளவு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இந்நிலையில், “கூகுளின் பரவலான சேவைகளில் சிறப்பான பிரைவசி செட்டிங் மற்றும் கண்ட்ரோல்களை அறிமுகம் செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதனை சரியாக செயல்படுத்தும் நோக்கில் சரியான வகையில் முதலீடு செய்து வருகிறோம். தொடர்ந்து எங்களது சேவைகளில் புதுமை மற்றும் பயனர்களின் ஆன்லைன் அனுபவத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மேம்பட்ட அம்சங்களை வழங்குவோம்,” என கூகுள் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலர் கெய்த் என்ரைட் தெரிவித்தார்.
“உலகம் முழுக்க இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள் கூகுளின் இலவச மற்றும் கட்டண சேவைகளை பயன்படுத்துவோர் சமளவில் தனியுரிமையை பெற வேண்டும், கூகுள் இதனை சரியாக வழங்கவே முயற்சிக்கிறது,”
புதிய அம்சங்களில் பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களில் கூகுள் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது ஒரே க்ளிக் செய்து அவற்றை இயக்கும் வசதி, சர்ச் மற்றும் மேப்ஸ் என பல்வேறு சேவைகளில் இன்காக்னிட்டோ மோட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Next Story






