என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
மூன்று கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்31 July 2018 9:33 AM GMT (Updated: 31 July 2018 9:33 AM GMT)
சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung
சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் 2019 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா அமைப்பு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கொரிய வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இரண்டு பிரீமியம் அம்சங்களை வழங்குவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்த மாடலில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் பின்புற கைரேகை சென்சார் வழங்குகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா சென்சார்களை வழங்க இருப்பதாக தி இன்வெஸ்டர் எனும் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மூன்று கேமரா அமைப்பு கேலக்ஸி எஸ்10 மாடலிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் முதற்கட்டமாக இந்த அம்சம் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாம்சங் மூன்று கேமரா செட்டப்: ஒரு லென்ஸ் வேரியபிள் அப்ரேச்சர், ஒரு சூப்பர்-வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்று கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இதே அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் குறைந்தளவு திறன் கொண்ட இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #smartphone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X