search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீசோழாபுரி அம்மன் கோவில்"

    • ராகு, கேது தோஷம் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடத்தி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
    • ஸ்தபதி யுவராஜ் குழுவினர் மற்றும் சிவநாதன் உள்பட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் மிகவும் பழமை வாய்ந்த சோழாபுரி கோவில் உள்ளது. இந்த கோவிலை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர்.

    ராகு, கேது தோஷத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வரும் சோழாபுரி அம்மன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ராகு, கேது தோஷம் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடத்தி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி கோவிலில் ஆகமவிதிகளின்படி பிரசன்னம் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கோவிலில் பல்வேறு திருப்பணிகளை செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ் அறிவுறுத்தலின்படி, எம்.எல்.ஏ. செல்வராஜின் மகன் திலக்ராஜ் தலைமையில் இந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

    இதில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவிலின் ஓய்வு பெற்ற நம்பூதிரி பி.என்.கோவிந்தன் குழுவினர் மற்றும் திருப்பூர் தியாகிகுமரன் காலனி சுடலை மகாராஜா கோவிலின் பூசாரியும், பிரபல அருள்வாக்கு சித்தருமான சுரேஷ் சுவாமிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டு, ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

    இதன்படி கோவிலில் உள்ள ராகு, கேதுவை திசை மாற்றி அமைப்பது, துர்க்கையம்மன் தெய்வத்தை புதிதாக நிறுவுவது உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த திருப்பணிகளை விரைவில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஸ்தபதி யுவராஜ் குழுவினர் மற்றும் சிவநாதன் உள்பட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, ஜப பாராயணம் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மேயர்கோவில் ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர்( ராகு கேது ஸ்தலம்) கோவிலில் நாளை 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15மணிக்கு மேல் 7. 45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை வேள்வி, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, மூல மந்திர ஹோமம், ஜப பாராயணம் நடைபெற்றது.

    காலை 8. 45 மணிக்கு விசேஷசந்தி, 11 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம், விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், திரவியாஹூதி, வேதிக அர்ச்சனை, வேத ஜப பாராயணம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், இரவு 7.30 மணிக்கு தேவி ஸ்ரீயின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, 8 மணிக்கு திருப்பூர் ரஜினி செந்தில் வழங்கும் கொங்கு புகழ் மேஸ்ட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை 21ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், திரவியாஹூதி, காலை 5.45 மணிக்கு நாடி சந்தானம், காலை 6.45 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 7 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 7.31 மணிக்கு ஸ்ரீசோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஷ்வரர் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 7.40 மணிக்கு ஸ்ரீ சோழாபுரி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கு செல்வராஜ் எம். எல்.ஏ., தலைமை தாங்குகிறார். பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர். 

    ×