search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷோயப் அக்தர்"

    • சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை கண்டிப்பாக விராட் கோலி முறியடிப்பார்.
    • விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும்.

    தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டு நவம்பருக்கு பின் சுமார் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் இருந்துவந்தார்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சதமடித்து அந்த குறையையும் தீர்த்தார்.

    இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என மொத்தமாக 75 சதங்களை விளாசி 2-ம் இடத்தில் உள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் என்ற சாதனையை தகர்ப்பாரா மாட்டாரா என்று பேசப்பட்டுவரும் நிலையில், கண்டிப்பாக சச்சின் சாதனையை தகர்ப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர்:-


    சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை கண்டிப்பாக விராட் கோலி முறியடிப்பார். கோலிக்கு 34 வயது. கண்டிப்பாக இன்னும் 6 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார். இந்த 6 ஆண்டில் 30-50 டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் மிகச்சுலபமாக 25 சதங்கள் அடிப்பார்.

    எனவே சச்சின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார்.

    ஆனால் அதற்கு அவரது ஃபிட்னெஸை பராமரிப்பது அவசியம். அதனால் டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கோலி ஆடவேண்டும். டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் எனர்ஜி உறிஞ்சப்படும். எனவே கோலி இதை மட்டும் செய்ய வேண்டும்.

    என்று அக்தர் கூறியுள்ளார்.

    ×