search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷில்லாங்"

    மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பரவிய வன்முறை ஓய்ந்தபோதிலும், பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கின் தேம் ஆவ் மாவ்லாங் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அரசு பேருந்து ஊழியர்களுக்கும் சில பெண் பயணிகளுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 பேர் தாக்கப்பட்டனர். பின்னர் ஒரு கும்பல் தேம் ஆவ் மாவ்லாங் நோக்கி சென்றபோது மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. ஷில்லாங் நகரத்தில் மாத்ரான், மாக்கர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

    பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் மீது வன்முறைக் கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். எனினும் அந்த கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததைத் தொடர்ந்து லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வந்தனர்.

    இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் போன்ற தீப்பற்றும் பொருட்களை கேன்கள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    தற்போது ஓரளவு பதற்றம் தணிந்து ஷில்லாங்கில் அமைதி திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதப்படை போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். #ShillongViolence #ShillongCurfew
    கலவரத்தால் பாதித்த ஷில்லாங்கில் பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் தெம்மேட்டர் என்ற இடத்தில் 31-ந் தேதி மாலை பஸ் ஊழியர் ஒருவர் உள்ளூர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை முடக்கப்பட்டது.

    மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ராணுவம் விரைந்தது. பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.

    கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 200 பெண்கள், குழந்தைகள் உள்பட 500 பேரை ராணுவம் மீட்டது. அவர்களுக்கு ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.

    முதல்-மந்திரி கொன்ராட் கே. சங்மா, உயர் மட்டக்குழுவை கூட்டி ஷில்லாங் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். 
    ×