என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலவரத்தால் பாதித்த ஷில்லாங்கில் ராணுவம் கொடி அணிவகுப்பு
Byமாலை மலர்2 Jun 2018 7:07 PM GMT
கலவரத்தால் பாதித்த ஷில்லாங்கில் பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
ஷில்லாங்:
மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் தெம்மேட்டர் என்ற இடத்தில் 31-ந் தேதி மாலை பஸ் ஊழியர் ஒருவர் உள்ளூர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை முடக்கப்பட்டது.
மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ராணுவம் விரைந்தது. பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 200 பெண்கள், குழந்தைகள் உள்பட 500 பேரை ராணுவம் மீட்டது. அவர்களுக்கு ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.
முதல்-மந்திரி கொன்ராட் கே. சங்மா, உயர் மட்டக்குழுவை கூட்டி ஷில்லாங் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் தெம்மேட்டர் என்ற இடத்தில் 31-ந் தேதி மாலை பஸ் ஊழியர் ஒருவர் உள்ளூர் பொதுமக்களால் தாக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானதால், பஸ் டிரைவர்கள் திரண்டனர். இதில் கலவரம் மூண்டது. கல்வீச்சு நடந்தது. போலீஸ் படை விரைந்து வந்து கூட்டத்தை விரட்டியடிக்க கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். போலீசார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு பல இடங்களுக்கும் கலவரம் பரவியது. நிலைமை மோசமானதால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவை முடக்கப்பட்டது.
மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ராணுவம் விரைந்தது. பிரச்சினைக்கு உரிய பகுதிகளில் ராணுவத்தினர் நேற்று கொடி அணி வகுப்புகள் நடத்தினர்.
கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 200 பெண்கள், குழந்தைகள் உள்பட 500 பேரை ராணுவம் மீட்டது. அவர்களுக்கு ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது.
முதல்-மந்திரி கொன்ராட் கே. சங்மா, உயர் மட்டக்குழுவை கூட்டி ஷில்லாங் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X