search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசுலா அதிபர் கொல்ல முயற்சி"

    என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கொலைகார கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். #VenezuelaCrisis #NickolasMaduro #DonaldTrump
    கராக்கஸ் :

    வெனிசூலாவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என குற்றம் சாட்டி வரும் அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து நிகோலஸ் மதுரோவுக்கு மேலும் அழுத்தம் தரும் வகையில் அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.



    இந்த நிலையில், தன்னை கொலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக நிகோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டினார். ரஷியாவை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இதுபற்றி அவர் கூறியதாவது:-

    என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கொலைகார கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு நாள் எனக்கு ஏதாவது நடக்கலாம். எனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான் டியூக் தான் பொறுப்பாவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின் போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர் நிகோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #NickolasMaduro #DonaldTrump 
    வெனிசுலா அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் எதிர்க்கட்சி எம்பி மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. #NicolasMaduro #JuanRequesens
    கராகஸ்:

    வெனிசுலா தலைநகர் கராகசில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ராணுவம் மற்றும் தேசிய படைகளின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்று உரையாற்றியபோது அவரை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

    வெடிகுண்டுகளுடன் வந்த 2 ஆளில்லா விமானங்கள் வெடித்து சிதறியபோது, பாதுகாப்பு படை வீரர்கள் அதிபரை சூழந்து கொண்டு அவரை பாதுகாத்தனர். இதனால் அதிபர் மதுரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பல வீரர்கள் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய சபையின் துணைத்தலைவரும், ஜஸ்டிஸ் பர்ஸ்ட் கட்சி எம்பியுமான ஜுவான் ரிகொசன்ஸ் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


    இவ்வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்தல், குற்ற சதி, பயங்கரவாதம் உள்ளிட்ட  6 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் இந்த குற்றங்கள் நிரூபணமானால் ஜுவான் ரிகொசன்சுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். #Venezuela #NicolasMaduro #JuanRequesens
    ×