search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு உபயோகப் பொருட்கள்"

    • ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு ராமசாமியிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
    • போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

     அவிநாசி:

    திருப்பூர் வாவிபாளையத்தை அடுத்த திருக்குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 64). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் துரைசாமி கடைக்கு தேவையான பிரிட்ஜ் வாங்குவதற்காக கடந்த வாரம் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிரிட்ஜ் விலையை கேட்டு வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து துரைசாமியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் பிரிட்ஜ் வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகமாகி உள்ளார். மேலும் தங்களுக்கு தேவையான பிரிட்ஜ்க்கான முன்பணம் ரூ.15 ஆயிரம் என்றும், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வந்தால் உங்களை அழைத்து சென்று பிரிட்ஜ் வாங்கி தருவதாகவும் துரைசாமியிடம் கூறியுள்ளார். இதன் பின்பு செல்போனில் பேசிய நபர் துரைசாமி மளிகை கடைக்கு வந்து அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    மோட்டார்சைக்கிளில் ஏறிய உடன் அந்த நபர் முதியவரி–டம் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு பெருமாநல்லூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஜெராக்ஸ் கடை அருகில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து வருமாறு ராமசாமியிடம் அந்த நபர் கூறியுள்ளார். ராமசாமி ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வந்து பார்த்த போது அந்த நபர் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முதியவர் ராமசாமி நடந்த சம்பவம் குறித்து பிரிட்ஜ் கடைக்கு போன் செய்து கேட்டுள்ளார். அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார்.

    இதுகுறித்து துரைசாமி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி தருவதாக கூறி யாரேனும் போன் செய்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என்றும், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

    • மகளிர் தின விழா திருத்துறைப்பூண்டி ரயிலடி பள்ளிவாசல் தெருவில் கொண்டாடப்பட்டது.
    • விழாவில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரயிலடி பள்ளிவாசல் தெருவில் உள்ள ஸ்ரீ பாலநாகம்மாள் மகளிர் சுய உதவி குழு சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மைக்கேல் ராஜ், ரம்யா குடும்பத்திற்கு குழுவின் உறுப்பினர் பிரதிநிதி ஜான்சிராணி, தேன்மொழி ஆகியோரின் தலைமையில் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    ×