search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்காலை"

    சேலத்தில் தந்தை திட்டியதால் மனமுடைந்த பெண் வி‌ஷம் குடித்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா, ரேவதி, கலைமகள் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மேனகாவுக்கு கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் மணமகன் வீட்டார் அழகேசன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அழகேசன் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள், மணமகன் வீட்டாரை சரியாக உபசரிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மணமகன் குடும்பத்தினர் அழகேசனிடம் புகார் கூறினர்.

    அழகேசன் வீட்டிற்கு வந்து மேனகா, ரேவதி, கலைமகள் ஆகியோரை அழைத்து சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த 3 பேரும் கடந்த மாதம் 28-ந் தேதி ஓரே நேரத்தில் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மேனகா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×