என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷம் குடித்து தற்காலை"
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவருக்கு மேனகா, ரேவதி, கலைமகள் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மேனகாவுக்கு கெங்கவல்லி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மணமகன் வீட்டார் அழகேசன் வீட்டிற்கு வந்தனர். அப்போது அழகேசன் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள், மணமகன் வீட்டாரை சரியாக உபசரிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மணமகன் குடும்பத்தினர் அழகேசனிடம் புகார் கூறினர்.
அழகேசன் வீட்டிற்கு வந்து மேனகா, ரேவதி, கலைமகள் ஆகியோரை அழைத்து சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த 3 பேரும் கடந்த மாதம் 28-ந் தேதி ஓரே நேரத்தில் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தனர். அவர்கள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மேனகா பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்