search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளிடம் விழிப்புணர்வு"

    • உரத்தின் பயன்பாடு குறித்து விளக்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நானோ யூரியா குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கலை நிகழ்ச்சியில் அனைத்து பயிர்களுக்கும் மேல் உரமாக யூரியா பயன்படுத் தப்பட்டு வருகிறது. நானோ யூரியா திரவமாக தெளிக்கலாம். நானோ பூரியா திரவம் 500 மில்லி லிட்டர் ஒரு மூட்டை பூரியாவிற்கு இணையான பயன்தரும், நானோ யூரியா திரவம் இலை வழியாக ஊடுருவி இலை முதல் வேர் வரைக்கும் சென்று தழைசத்து அளிக்கிறது.

    மண் மற்றும் நீர் மாசடை யாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் லாபம் பெறலாம் என்பது குறித்து கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அடுத்த சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    இதில் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தோட்டக்கலை பயிர்களுக்கு இயற்கை முறையில் கரைசல் தயாரித்து அவற்றை காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தும் விதம் குறித்தும் பாதுகாப்பு மற்றும் மகசூல் குறித்தும் செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×