search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை நிகழ்ச்சி நடத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வு
    X

    கலை நிகழ்ச்சி நடத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி.

    கலை நிகழ்ச்சி நடத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வு

    • உரத்தின் பயன்பாடு குறித்து விளக்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நானோ யூரியா குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கலை நிகழ்ச்சியில் அனைத்து பயிர்களுக்கும் மேல் உரமாக யூரியா பயன்படுத் தப்பட்டு வருகிறது. நானோ யூரியா திரவமாக தெளிக்கலாம். நானோ பூரியா திரவம் 500 மில்லி லிட்டர் ஒரு மூட்டை பூரியாவிற்கு இணையான பயன்தரும், நானோ யூரியா திரவம் இலை வழியாக ஊடுருவி இலை முதல் வேர் வரைக்கும் சென்று தழைசத்து அளிக்கிறது.

    மண் மற்றும் நீர் மாசடை யாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் லாபம் பெறலாம் என்பது குறித்து கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×