search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி அடித்துக்கொலை"

    • கள்ளக்காதலை கண்டித்ததால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கருமாநாயக்கனூரை சேர்ந்தவர் வையப்பன்(50) இவர் அதேபகுதிைய சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வந்தார். அப்போது முத்து லட்சுமிக்கும், வையப்ப னுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இதனை முத்துலட்சுமி யின் சம்பந்தியான சக்திவேல் என்பவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வையப்பன் முத்துலட்சுமியுடன் தொடர்ந்து பழகி வந்தார். நேற்று வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்த வையப்பனை சக்திவேல் சுத்தியால் சரமாரியாக தாக்கினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே முத்துலட்சுமி அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி ச்சென்றார். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    • விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • மகளை அழைத்து வருவதற்காக சென்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 47). விவசாயி. இவரது மகள் துர்கா நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் அரியலூருக்கு வந்தார். அவரை ஊருக்கு அழைத்து வருவதற்காக நேற்று மாலை மாக்காயிகுளத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அரியலூர் ெரயில் நிலையம் நோக்கி ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தார்.

    ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் மறைந்திருந்தவர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் திடீெரன வந்து, மோட்டார் சைக்கிள் மூலம் ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, சாலையோர பள்ளத்தில் தள்ளி இரும்பு ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ராமச்சந்திரனின் மனைவி லலிதா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், மதியழகன், மங்களமேடு துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, ராமச்சந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ராமச்சந்திரனின் உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×