search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய கிணறு"

    மதகடிப்பட்டு அருகே விவசாய கிணற்றில் குளித்த பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர், தமிழக போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் தணிகைவேலன் (வயது 17). இவர், பி.எஸ்.பாளைத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தணிகைவேலன் தனது நண்பர்களுடன் மதகடிப்பட்டையொட்டி தமிழக பகுதியான எல்.ஆர். பாளையத்தில் முருகையன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

    இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கிணற்றில் இருந்து வெளியேறிய நிலையில் தணிகைவேலன் மட்டும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர். விவசாயிகள் கிணற்றில் இறங்கி தேடியும் தணிகைவேலனை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து இதுபற்றி வளவனூர் போலீசாருக்கும், விழுப்புரம் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் தணிகைவேலனை பிணமாக மீட்டனர்.

    இதைத்தொடர்ந்து வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×