search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுந்து வாலிபர் பலி"

    • சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (வயது 38). இவர் அருகே உள்ள தட்டப்பள்ளி க்கு உணவு வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த வழியாக பவானிசாகர் பகுதியை சேர்ந்த சரவணன் (32) என்பவர் அன்னூரில் இருந்து மோட்டார் சைக்கி ளில் வந்து கொண்டு இரு ந்தார். சரவணன் தட்ட ப்பள்ளி அருகே வந்தார். அப்போது சதீஸ் நிலை தடுமாறி சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக விழுந்தார். இதில் அவர்கள் இருவரும் கீேழ விழுந்தனர்.

    இதில் சதீசுக்கு கால் உள் பட பல்வேறு இடங்களில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் சதீசை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு காலில் பலத்த அடிப்பட்ட தால் ஸ்கேன் எடுப்பதற்காக அவரை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் அங்கு செல்லாமல் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார்.

    இதையடுத்து அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை காலை வருமாறு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இதை க்யடுத்து அவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சதீஸ் வீட்டில் திடீரென இறந்து விட்டார். இது குறித்து போலீசாருக்கு அவரது உறவினர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ் பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×