search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணா்வு நிகழ்ச்சி"

    • போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
    • போதைப்பொருள்லிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    இதில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்தும், போதைப் பொருள்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கயம் போலீசார், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • ராணுவ மையம் சாா்பில் சோலடாமட்டம் கிராமத்தில் அவுட்ரிச் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தூய்மையின் முக்கியத்துவத்தை ராணுவ வீரா்கள் விளக்கினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கண்டோ ன்மென்டுக்குட்பட்ட வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் சோலடாமட்டம் கிராமத்தில் அவுட்ரிச் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், கிராம மக்களுக்கான மருத்துவ முகாம், கைப்பந்து விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய விரிவுரைகளை ராணுவ மருத்துவா்கள் மற்றும் விளையாட்டுத் துறையினா் எடுத்துரைத்தனா்.

    மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம், அக்னிவீரா் சோ்க்கை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்சியில், தூய்மையின் முக்கியத்துவத்தை ராணுவ வீரா்கள் விளக்கினா். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாசதிஷ்குமார், இளைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதியில் ராணுவத்தின் மூலம் மருத்துவ முகாம் முதியோருக்கு நலத்திட்டம், ஆண்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி ராணுவத்தில் சேர்வதற்கான அறிவுரைகளை அளித்த ராணுவ அதிகாரிகளுக்கு ஊராட்சி சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் தெரிவித்தார்.

    ×