search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்"

    • உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
    • தவறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, ம ஞ்சள், மரவள்ளி, நிலக்கட லை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்ப ட்டுள்ளன.

    விவசாயிகள் பயிர் சாகு படி பணிகளை தொடர ஏது வாக தற்போது யூரியா உரம் 2936 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 4006 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 2671 மெ.டன்னும்,

    காம்ப்ளக்ஸ் உரம் 13961 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 965 மெ. டன்னும், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறு ப்பு) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உரங்க ளின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவ ரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரி யும்படி வைப்பது,

    விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொ ப்பம் பெற்று உரங்கள் வழ ங்குவது, அனைத்து விற்ப னைகளையும் விற்பனை மு னைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது,

    உரிய முதன்மைச்சான்று படிவங்க ளை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்மு தல் செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்க ளில் மட்டும் இருப்பு வைத்தி ருப்பது ஆகியவற்றை தவறா மல் பின்பற்ற அறிவுறுத்த ப்படுகிறது.

    அத்துடன் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், பயிர்களின் உண வாகக் கருதப்படும் உரங்களி ல் கலப்படம் செய்து விற்பனை செய்யக்கூடாது என்றும்,

    தவறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும்.

    இதில் குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தி ல், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,

    திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள லாம்.

    இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×