search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் விவசாயி பலி"

    • மார்க்கெட்டுக்கு பூ கொண்டுவந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பாலமதி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 41) விவசாயி.

    இவர் நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு பைக்கில் பூ கொண்டு வந்தார். உடன் அவரது உறவினர் நவீன் குமார் (17) என்பவரும் வந்தார். இருவரும் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களை விற்பனைக்கு வழங்கி விட்டு பின்னர் வீடு திரும்பினர்

    சாய்நாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு சிக்கன் கடை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த கருணா மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். நவீன்குமார் படுகாயம் அடைந்தார்.

    பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×