search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை அகற்றம்"

    • அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாத்மா காந்தி நகரில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடத்தில் விநாயகர் சிலையை கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வணங்கி வந்தனர்.

    இந்த சிலை வைத்ததற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற நகராட்சி நிர்வாகம் 3 முறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இது சம்பந்தமாக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் விநாயகர் சிலையை அகற்றக்கூடாது என மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து விநாயகர் சிலையை கொட்டும் மழையில் அகற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மீண்டும் அந்த பகுதியில் சிலை வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

    சிலையை அகற்றுவதற்கு முன்னதாக ஐயரை வைத்து பூஜை செய்து சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.

    • இருந்தபோதும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி தாங்களே எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.

    திண்டுக்கல்:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் சார்பில் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இருந்தபோதும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து அதனை நிர்வாகிகள் வழிபாடு செய்தனர். மேலும் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக மேளதாளம் முழங்க எடுத்துச் சென்று அதனை கரைக்க வந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் வரவே டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், தரசில்தார் செழியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைநதனர்.

    அனுமதி வழங்கப்படாத இடத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என அவர்கள் தெரிவித்தனர். இருந்தபோதும் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றதால் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்ாான சூழல் நிலவியது. போலீசார் விநாயகர் சிலையை கைப்பற்றி தாங்களே எடுத்துச் சென்று திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.

    மேலும் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்த இந்து முன்னணி நகர தலைவர் ஞானசுந்தரம் மற்றும் சங்கர் கணேஷ் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×