search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானிகள் ஆய்வு"

    • கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
    • இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனைதொடர்ந்து இருமாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளர் விஜயசரண் உள்ளார்.

    தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரிதொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரளநீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வேணு, நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறி யாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இவர்கள் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீபட்நாயக், விஞ்ஞானி பிரவீனாதாஸ், ஜெனிபர் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    நிலநடுக்க கருவி, அதிர்வு கருவிகள் ஆகியவற்றின் இயக்கம், கேலரி பகுதியில் கசிவுநீரை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீநெட்ஜ் கருவிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் வானிலை கருவிகள் பயன்பாடுகள், மழைமானி அளவீட்டு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், மத்திய நீர்வளஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாகவும், திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் பெங்களூரை சேர்ந்த மத்திய சுரங்கத்துறை கீழ் வரும் தன்னாச்சிபெற்ற அமைப்பு இங்கு ஆய்வு நடத்தியது கண்டனத்துக்குரியதாகும். கோலார் தங்கவயலில் தங்கம் ேதாண்டி எடுக்கும் போது அதற்காக நிறுவப்பட்டது இந்த அமைப்பு. நாடு முழுவதும் சுரங்கம், நீர்மின்திட்டங்கள், அணுமின்திட்டங்கள், எரிவாயு சார்ந்த திட்டங்களுக்கு ஆலோசனையை வழங்கி வருகிறது.

    இவர்கள் திடீரென அணைப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. ஒவ்ெவாரு முறையும் அணையின் நீர்மட்டம் உயரும் போது இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. கேரள அரசு தொடர்ந்து நீர்மட்டத்தை உயர விடாமல் சதிதிட்டம் செய்கிறதோ என சந்தேகம் எழுகிறது.

    எனவே இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும். என்றார்.

    ×