search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயேந்திரர்"

    • சிதம்பரம் பொற்சபையில் நடராஜர் மூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடி ஞானமூர்த்தியாக உள்ளார்.
    • பக்தர்கள் சிவ தரிசனம் பெற்று நடராஜர் அருளாலே, நல்ல ஆனந்தத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மிக பயணமாக விசாகப்பட்டினம் சென்று உள்ளார். ஆருத்ரா தரிசனத்தையொட்டி விஜயேந்திரர் பக்தர்களுக்கு கூறி இருப்பதாவது:

    சிதம்பரம் பொற்சபையில் நடராஜர் மூர்த்தி ஆனந்த தாண்டவம் ஆடி ஞானமூர்த்தியாக உள்ளார். அவரை மார்கழி திருவாதிரை ஆருத்ரா நட்சத்திரத்தன்று தரிசித்தல் புண்ணியத்தை அளிக்கும்.

    சமஸ்கிருத பாடல்களை ஸ்ரீ வாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் மூலமாக அட்டவீரட்டான தலங்களில் காஞ்சி மகா பெரியவர் பாடச் செய்தார். தினசரி காஞ்சி மடத்தில் இந்த ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

    பக்தர்கள் சிவ தரிசனம் பெற்று நடராஜர் அருளாலே, நல்ல ஆனந்தத்தை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சிவனுக்கு ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று வில்வத்தை சமர்ப்பித்து, தும்பைப் பூவை சமர்ப்பித்து சிவ நாமமே கூறி, திருநீறு அணிந்து அருள் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×