search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்ந்து காட்டுவோம்"

    • கைவினை பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
    • உலக வங்கி குழு தலைவர் சமிக் சுந்தர் தாஸ், சமூக மேம்பாட்டு திட்ட ஆலோசகர் மதுஸ்ரீ பேனர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருள்புரத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.  திருப்பூர், பொங்கலூர், அவினாசி, குண்டடம், உடுமலை ஆகிய 5 வட்டாரங்களில் கடந்த 2019ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சமுதாய பண்டக பள்ளி, உற்பத்தியாளர் குழு, தொழில் குழு, உற்பத்தியாளர் நிறுவனம், மதி சிறகுகள் அமைப்பு ஆகியவை குறித்து உலக வங்கியை சேர்ந்த குழு தலைவர் சமிக் சுந்தர் தாஸ், சமூக மேம்பாட்டு திட்ட ஆலோசகர் மதுஸ்ரீ பேனர்ஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கைவினை பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள் அருள்ஜோதி அரசன், கணேஷ்குமார், ராஜேஸ்குமார், திருப்பூர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது

    திருப்பூர்

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்து முறையிட்டனர்.

    மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பொங்கலூர் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் நிதிக்கான ரூ.10 லட்சம் காசோலையை கலெக்டர் வழங்கினார்.

    • வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயற்குழு கூட்டம் மற்றும் சமுதாய திறன் பள்ளி மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடை பெற்றது.

    இதில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சமுதாய திறன் பள்ளி மூலம் கட்டுமான பயிற்சி, பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் சான்றிதழ் வழங்கி பேசினார்.

    அப்போது அவர், பயிற்சி பெற்றவர்கள் வீட்டிலேயே இருந்துவிடாமல் சுயமாகவோ அல்லது வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமாக நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×