search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toy Making"

    • வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயற்குழு கூட்டம் மற்றும் சமுதாய திறன் பள்ளி மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடை பெற்றது.

    இதில் வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் இதுவரை நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சமுதாய திறன் பள்ளி மூலம் கட்டுமான பயிற்சி, பொம்மை தயாரித்தல் பயிற்சி, செயற்கை ஆபரணம் நகை தயாரித்தல் போன்ற பயிற்சி பெற்றவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் சான்றிதழ் வழங்கி பேசினார்.

    அப்போது அவர், பயிற்சி பெற்றவர்கள் வீட்டிலேயே இருந்துவிடாமல் சுயமாகவோ அல்லது வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலமாக நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×