search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய்த் துறையினரை கண்டித்து"

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள குமுழி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.

    இதனை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறையினரை கண்டித்து செங்கல்பட்டு பழை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சீனிவாச ஐயங்கார், மாநில பொருளாளர் செல்வி கிருஷ்ண முர்த்தி, தொகுதி செயலாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கணபதி, ஒண்டிவீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×