search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் கிராம ஊழியர் சங்கம்"

    • ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
    • சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழ்நாடு வருவாய் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி-பிரிவில் இணைக்க வேண்டும். 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×