என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
நீங்கள் தேடியது "வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை"
டெல்லியில் ஆம்ஆத்மி மந்திரி கைலாஷ் கஹ்லாட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள். 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 16 இடங்களில் இந்த சோதனையை மேற்கொண்டார்கள். #ITRaid
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம்ஆத்மி ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் கைலாஷ் கஹ்லாட்.
இவர் மற்றும் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இந்தநிலையில் மந்திரி கைலாஷ் கஹ்லாட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
டெல்லியில் இருக்கும் வசந்த்கஞ்ச், டிபன்ஸ் காலனி, பஸ்லூம் விகார், நப்ஜாகர், லட்சுமி நகர் மற்றும் குர்கானில் இருக்கும் பாலம் விகார் ஆகிய பகுதிகளில் உள்ள மந்திரியின் வீடுகள், நிறுவனங்கள், குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
60-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் 16 இடங்களில் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டார்கள்.
மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு ஆம்ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை என்று அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வருமான வரி சோதனை தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் வலியுறித்தியுள்ளார். #ITRaid
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம்ஆத்மி ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் கைலாஷ் கஹ்லாட்.
இவர் மற்றும் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இந்தநிலையில் மந்திரி கைலாஷ் கஹ்லாட் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
டெல்லியில் இருக்கும் வசந்த்கஞ்ச், டிபன்ஸ் காலனி, பஸ்லூம் விகார், நப்ஜாகர், லட்சுமி நகர் மற்றும் குர்கானில் இருக்கும் பாலம் விகார் ஆகிய பகுதிகளில் உள்ள மந்திரியின் வீடுகள், நிறுவனங்கள், குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
60-க்கும் மேற்பட்ட வருமானவரி அதிகாரிகள் 16 இடங்களில் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டார்கள்.
மந்திரி வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு ஆம்ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை என்று அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வருமான வரி சோதனை தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் வலியுறித்தியுள்ளார். #ITRaid
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X