search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானம் உயர்வு"

    • மதுரை ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.170 கோடியாக உயர்ந்துள்ளது.
    • ெரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 38 சதவீதம் அதிகம் ஆகும் என்று மதுரை ெரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல், வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர் ஆகியவை சரக்கு ெரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.170 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.128.44 கோடியாக இருந்தது. மதுரை கோட்டத்தில் கடந்த 6 மாத சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 413 சரக்கு ெரயில்களில் ஏற்றுமதி நடந்தது. தற்போது 614 ஆக உயர்ந்துள்ளது. தென்னக ெரயில்வே நடப்பு அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1766 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த அரையாண்டு காலத்தை விட 17.42 சதவீதம் அதிகம் ஆகும். ெரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 38 சதவீதம் அதிகம் ஆகும் என்று மதுரை ெரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

    ×