search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி செலுத்தாதவர்கள்"

    • வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கீழக்கரை நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி கமிஷ னர் செல்வராஜ் கூறியதா வது:-

    கீழக்கரை நகராட்சியில் பொது மக்களுக்கு தேவை யான பல்வேறு அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வரி செலுத்த அறிவிப்பு கொடுத்தும், பணியா ளர்களும் நேரடியாக சென்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் அதிக பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தி னால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு வரியை அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பகிரங்கமாக பொது வெளியில் மக்களின் பார்வைக்கும் வைக்கப்படும். மேலும் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே திட்ட பணிகள் மேற்கொள்ள முடியும்.

    எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் நகராட்சி யில் செலுத்த முன்வர வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்த லாம்.தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ராமநாதபுரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்வரி, தொழில்வரி, குத்தகை பாக்கி, வாடகை போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தும் பணத்தில் இருந்து தான் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.

    ராமநாதபுரம் நகராட்சியில் வசிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ.10.90 கோடி, தொழில் வரி ரூ.63.31 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.1.72 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ.2.93 கோடி, கடை வாடகை மற்றும் குத்தகை ரூ.1.71 கோடி என மொத்தம் ரூ. 17.90 கோடி வரி பாக்கியை செலுத்தவில்லை.

    இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. ராமநாதபுரம் நகராட்சிக்கு வரி நிலுவை அதிகமாக உள்ளதால் நகராட்சி பொது நிதியில் இருந்து செலவினம் மேற்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே மேற்கண்ட வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) லட்சுமணன் உடன் இருந்தார்.

    ×