search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை"

    வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). லாரி டிரைவர். இவருடைய மனைவி நிர்மலாதேவி (27). இவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், அவரது தந்தை செல்வராஜ், தாய் ராணி, சகோதரிகள் சுந்தரி, முத்துலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதில் லாரி டிரைவர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×