search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்முறைகள்"

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது.
    • பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை ஏற்படுத்திய வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை ஏற்படுத்திய வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கார்த்தி கேயன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது,
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார்.

    இதில் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்து வருவேன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன், முதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பேன், மேலும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறையில் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    அப்போது சமூக பாதுகாப்பு நல அலுவலர் தீபிகா மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அஜிதா பேகம் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    ×