search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில்  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்
    X

     கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது.
    • பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை ஏற்படுத்திய வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று 4 முனை சந்திப்பில் நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை ஏற்படுத்திய வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் நாராயணசாமி, மாரீஸ்வரன், கார்த்தி கேயன், கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×