search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர் பலி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கடந்த 13-ந் தேதி அதிகாலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில் மர்ம நபர்கள், தீ வைத்தனர்.

    இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (22) ஆகியோர் தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்வந்த் (19), கோகுல் (23) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜேஷ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகிராம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விளையாட்டாக பிரியரஞ்சன் சாகுவின் ஆசன வாயிலில் கம்ப்ரசரை நுழைத்தார்.
    • பிரியரஞ்சன் சாகுவை மீட்டு பாடியநல்லூரில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியரஞ்சன் சாகு பரிதாபமாக இறந்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரியரஞ்சன் சாகு(வயது23) என்பவர் ஹெல்பராக பணியில் சேர்ந்தார். இவர் குனிந்து அங்கிருந்த எந்திரங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சூப்பர்வைசரான ஆந்திர மாநிலம் பத்ராவரம் பகுதியைச் சேர்ந்த சாய்ராகவ்(22) என்பவர் விளையாட்டாக பிரியரஞ்சன் சாகுவின் ஆசன வாயிலில் கம்ப்ரசரை நுழைத்தார்.

    இதில் அதிவேகமாக வந்த காற்று பிரியரஞ்சன் சாகுவின் வயிற்றுக்குள் சென்றது. உடனே அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பிரியரஞ்சன் சாகுவை மீட்டு பாடியநல்லூரில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியரஞ்சன் சாகு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்பார்வையாளர் சாய் ராகவ்வை கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விளையாட்டாக செய்த செயல் வாலிபரின் உயிரை பறித்து விட்டது.

    ×