search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி ஊழியர் சாவு"

    • நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த ஊழியர் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் போடியில் உள்ள வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தேவாரம் சாலை கோணம்பட்டி தண்ணீர்தொட்டி பகுதியில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.

    இதனால் நிலைதடுமாறிய பிரபு பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×