search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபாய் 2000 விமர்சனம்"

    ருத்ரன் இயக்கத்தில், பாரதி கிருஷ்ணகுமார், கராத்தே வெங்கடேஷ், ஷர்னிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரூபாய் 2000 படத்தின் விமர்சனம்.
    விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதால், அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுக்கிறார்.

    ஏ.டி.எம்.மிஷினில் இருந்து பேனாவினால் எழுதப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று மருந்து கடைக்காரர் கூறி, மருந்து கொடுக்க மறுத்துவிடுகிறார். அய்யநாதனிடம் வேறு பணம் இல்லை. 2000 ரூபாயை மாற்ற முடியாத நிலையில், மருந்து கிடைக்காமல் குழந்தை இறந்துபோகிறது.

    விமர்சனம்

    குழந்தையை இழந்த அய்யநாதன் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். இறுதியில் அய்யநாதனின் குழந்தை மரணத்திற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. 

    நாம் அன்றாடம் கைகளில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டில் என்னென்ன சட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன, அது நமக்கு எப்படியெல்லாம் சாதகமாக இருக்கின்றன என்பதையெல்லாம் தன் திரைக்கதை மூலம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ருத்ரன். நல்ல கதைக்களத்தோடு இறங்கியிருக்கும் இயக்குனர் ருத்ரன் கவனிக்க வைக்கிறார். 

    விமர்சனம்

    பாரதி கிருஷ்ணகுமார் நிஜமாக வழக்குரைஞராக வந்து நீதிமன்றத்தில் வாதிடுவது கம்பீரம். பணத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து மக்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதைக் கூறும் காட்சி புதிது. 

    அரசு வழக்கறிஞராக வரும் கராத்தே வெங்கடேஷ் கச்சிதமான தேர்வு. விவசாயியாக அய்யநாதன், வழக்கறிஞர் அஜிதாவாக ஷர்னிகா உள்படம் பலரும் தேர்ந்த திரைக்கலைஞராக நடித்திருக்கிறார்கள். முற்றிலும் புதுமுகங்களே நடித்திருப்பதால், அவர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தால் படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இடைவேளைக்குப்பின், வேகம் குறைகிறது. குறைகளை தாண்டி, அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    இனியவன் இசையையும் பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    மொத்தத்தில் ‘ரூபாய் 2000’ புது நோட்டு.
    ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #SpecialAssistance #TNgovt
    சென்னை:

    வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணை போலி என்றும், மனுதாரர் அந்த அரசாணை நகலை எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து விசாரித்து அறிய வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அத்துடன், வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அரசாணை மற்றும் தமிழக அரசின் வாதங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், 2000 ரூபாய் உதவித் தொகை வழங்க தடையில்லை என அறிவித்தனர்.



    அதன்பின்னர் அரசாணையில் திருத்தம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி கருணாநிதி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தாக்கல் செய்த அரசாணை வரைவு அரசாணை என்றும், அரசு தாக்கல் செய்தது அசல் அரசாணை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 2,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து வரைவு அரசாணை வெளியானது குறித்து விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SpecialAssistance #TNgovt
    ×