search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்ததும் ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குடியாத்தம்:

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். மாநில இணை செயலாளர் ஏ.இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இர்ஷாத்அலி, மாவட்ட அமைப்பாளர் நியாஸ் அகமது, நகர தலைவர் மைனுதீன், வர்த்தக அணி வாலிபாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், அப்பாவி பொதுமக்கள் 12 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையாக நடடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளதை கண்டுக்காத மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று காலை பெல் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், சிவக்குமார், கணேஷ், ஸ்டாலின், சங்கர நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×