search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhel employee demonstration"

    ராணிப்பேட்டை பெல் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் 2-ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.#Bhelworkerstruggle

    வாலாஜா:

    ராணிப்பேட்டை பெல் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் 2-ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்பார்வையாளர்கள் ஊதிய குழு அறிக்கை வெளியிட்டதை கண்டித்தும் எஸ் 1, எஸ் 3 மேலாளர்கள் ஊதிய மாற்றம் டி.பி.இ., டி.எச்.ஐ.ஜி. வழிகாட்டுதல் படி இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் எஸ் 1, எஸ் 3 பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடு செய்ய வேண்டும்.

    எஸ் 9, எஸ் 10 பதவிகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொதுச் செயலாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் ரதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #Bhelworkerstruggle

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் நிறுவன நுழைவு வாயில் முன்பு, நிறுவன மேற்பார்வையாளர்கள் ஊதிய மாற்ற அறிவிக்கையை காணொலி காட்சி மூலம் வெளியிட்டதை கண்டித்தும், பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பீடை ஈடுசெய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக பெல் ஊரக வளாகத்தில் தொடங்கி பெல் நிறுவன நுழைவு வாயில் வரை ஊர்வலமாக சென்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொது செயலாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ரத்தீஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்ததும் ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    குடியாத்தம்:

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். மாநில இணை செயலாளர் ஏ.இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இர்ஷாத்அலி, மாவட்ட அமைப்பாளர் நியாஸ் அகமது, நகர தலைவர் மைனுதீன், வர்த்தக அணி வாலிபாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், அப்பாவி பொதுமக்கள் 12 பேர் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையாக நடடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளதை கண்டுக்காத மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் இன்று காலை பெல் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், சிவக்குமார், கணேஷ், ஸ்டாலின், சங்கர நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×