search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைனா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார்.
    • நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மிக எளிமையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.


    அமலாபால்- ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அமலாபால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அமலா பாலுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்தவர் ஜான் மேக்ஸ்.
    • இவர் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு மோகனவேல் என்பவருக்கு தனது நிலத்திற்கான பொது அதிகாரம் வழங்கியுள்ளார்.

    மைனா திரைப்படத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    மைனா, சாட்டை போன்ற பல படங்களை தயாரித்தவர் ஜான் மேக்ஸ். இவர் மோகனவேல் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு வேப்பம்பட்டில் உள்ள தனது நிலத்திற்கு பொது அதிகாரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோகனவேலிடம் சென்று, அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக பொய் சொல்லி அவரிடம் இருந்து அசல் பத்திரத்தை ஜான் மேக்ஸ் வாங்கியுள்ளார்.பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் பொது அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்கி நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பொது அதிகாரத்தை ரத்து செய்தது தெரிந்து மோகனவேல், ஜான்மேக்ஸிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ஜான் மேக்ஸ் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதையடுத்து மோகனவேல் ஆவடி காவல் ஆணையகரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார்.புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் விருகம்பாக்கத்தில் உள்ள ஜான் மேக்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



    • ஆத்தூர் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன.
    • சில காகம் மற்றும் மைனாக்கள் உயிரிழந்தன. இதைபார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    செம்பட்டி:

    செம்பட்டியில் ஆத்தூர் யூனியன் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இங்கிருந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென காகம் மற்றும் மைனாக்கள் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தது.

    இதில் சில காகம் மற்றும் மைனாக்கள் உயிரிழந்தன. இதைபார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் பறவைகள் இறந்தனவா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×