search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி மீட்பு"

    • பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்
    • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 73). அதே கிராமத்தில் பாசி படிந்து குளம் ஒன்று உள்ளது. நாகம்மாள் அந்த குளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கால் தவறி குளத்தில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் வரவில்லை. இதனால் நாகம்மாள் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தின் அருகே சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது நாகம்மாள் குளத்தில் இருந்த காய்ந்த மரக்கிளை யை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் குளத்தில் இறங்கி மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் நாகம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு முழுவதும் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டியை பொதுமக்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அழகாபுரம் ரெட்டியூர் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முப்பிடாரியம்மாள் எனும் மூதாட்டி சேர்க்கபப்ட்டார்.
    • தங்குவதற்கு இடமின்றி முட்புதரின் உள்ளே படுத்துக் கிடந்தவரை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முப்பிடாரியம்மாள் எனும் மூதாட்டி சேர்க்கபப்ட்டார். இந்த மூதாட்டி வழி தவறி வந்து அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.

    தங்குவதற்கு இடமின்றி முட்புதரின் உள்ளே படுத்துக் கிடந்தவரை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவலர்கள் பிரபாகரன், கோவிந்த ராஜ், சுரேஷ் ஆகியோர் உடனடி யாக விரைந்து வந்து விசாரித்து அவரை மீட்டு அருகிலிருந்த நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் இல்ல மேலாளர் நிவேதிதா வசம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் ராஜபா ளையத்தை சேர்ந்தவர் என்றும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்படட நிலையில் போக்கி டம் இல்லாமல் கடந்த சில மாதங்க ளாகவே சுற்றித்திரிவதாகவும் கூறினார். இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு மூதாட்டி மகிழ்சசியுடன் ஊர் பொதுமக்க ளுக்கும், காவலர்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகிகள் அண்ணாதுரை, ராமஜெயம் ஆகியோருக்கும் நன்றி கூறினார்.

    ×