search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி காயம்"

    • ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
    • விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி வரலட்சுமி(வயது58) ஆவார். இந்த மூதாட்டி நேற்று முன்தினம் காலை ஆரணி கும்மடம் தெருவில் உள்ள பவானி அம்மன் திருக்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    பின்னர், கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக இவரது சேலையில் தீப்பிடித்தது. அப்பொழுது காற்று பலமாக வீசியது. இதனால் சேலையில் தீ மளமளவென பற்றி உடல் கருகி அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து வரலட்சுமியின் மகள் சுசீலா நேற்று இரவு ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×