search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறிந்து சேதம்"

    • சென்னிமலை டவுன் மற்றும் கிராமங்களில் இரவில் திடீரென மழை பெய்தது
    • ஆயிரக்க ணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது. வெட்டக்கூடிய நிலையில் இருந்த சிலரக வாழைத்தா ர்கள் இதில் அதிகளவில் சேதமானது

    சென்னிமலை,

    சென்னிமலை சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் பகலில் கடுமையான வெயில் அடித்தது. சென்னிமலை டவுன் மற்றும் கிராமங்களில் இரவில் திடீரென மழை பெய்தது.

    சிறிது நேரத்தில் சூறாவளிக்காற்றும் சேர்ந்து அடித்தது. சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கிராமப் புறத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் சிலரது தோட்டங்களில் பல ஏக்கரில் இருந்த ஆயிரக்க ணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது. வெட்டக்கூடிய நிலையில் இருந்த சிலரக வாழைத்தா ர்கள் இதில் அதிகளவில் சேதமானது.

    இதனால் பல லட்சக்க ணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழைத் தார்கள் சேதமானதால் அரசு நஷ்ட ஈடு தரவே ண்டும் என பாதி க்கப்பட்ட விவசா யிகள் கோரிக்கை வைத்து ள்ளனர். மேலும், சில கிராமங்களில் சூறாவளி க்காற்றில் மற்ற சில மரங்க ளும் வேரோடு சாய்ந்து சேதமானது.

    ×