search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் குமாரசாமி"

    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து மத்திய அரசு குழுவினர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். #SouthWestMonsoon #KeralaRains #CMKumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் குடகு, ஹாசன், தென்கன்னடம், சிக்கமகளூரு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கடந்த மாதம் பலத்த மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு, ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் மற்றும் உள்கடட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கர்நாடக அரசின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான குழுவினர், வேள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய அரசின் இரு குழுக்கள் ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அணில்மாலிக் தலைமையில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஜிதேந்திரபன் வார், மத்திய வேளாண்துறை இணை இயக்குனர் பொன்னுசாமி ஒரு குழுவினர் குடகு மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

    பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இக்குழு ஹாரங்கி சென்று, அங்கிருந்து சோம்வார்பேட் வட்டத்தின் ஹட்டிஹோளே கிராமத்துக்கு சென்றனர். அங்கு உள்கட்டமைப்பு சேதங்கள், பயிர் சேதங்களை பார்வையிட்டனர். பின்னர் முக்கூட்லு பகுதிக்கு சென்று, அங்கிருந்து ஜம்பூருக்கு சென்ற குழுவினர் தோட்டகலை சேதமங்களை ஆய்வு செய்தனர்.

    அதன் பிறகு மடிக்கேரிக்கு சென்ற மத்திய ஆய்வு குழுவினர், அங்கு மாவட்ட கலெக்டரை சந்தித்து வெள்ள சேதங்கள் குறித்து கேட்டு அறிந்தனர். இந்த குழுவினர் வியாழக்கிழமை ஹெப்பட்டகெரி பகுதியில் உள்ள சண்முகா, குமாரசாமி காலனியில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு சேதங்களை பார்வையிடுகிறார்கள்.


    அதன் பிறகு, தேவஸ்தூர் பள்ளி சந்திப்புக்கு சென்று அங்கு உள்கட்டமைப்பு சேதம், பயிர் சேதங்களை ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு தந்திபாலா பாலம், கலூர் சாலை, மண்டலப் பட்டி, குந்தரகோடி, மடே கிராமம், மொன்னன்கெரே பகுதிகளுக்கு சென்று அங்கும் வெள்ள சேதங்களை பார்வையிட்டு மதிப்பிடுகிறார்கள்.

    இதேபோல, மத்திய நிதித்துறை துணைச் செயலாளர் பர்தெந்துகுமார்சிங் தலைமையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திபண்டித், மத்திய தரைவழிப் போக்குவரத்து கழக மண்டல அதிகாரி சதானந்த்பாபு ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் தென்கர்நாடக மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மங்களூரு சென்ற மத்திய ஆய்வுக்குழுவினர் அங்கிருந்து உடுப்பி சென்று, முல்கி, அட்யபாடி, பஜ்பே ஆகிய இடங்களில் பயிர் சேதம் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களை பார்வையிட்டு, பின்னர் மங்களூரில் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகளை மாவட்ட கலெக்டரிடம் கேட்டு அறிந்தனர்.

    மங்களூருவில் இரவு தங்கும் ஆய்வு குழுவினர் நேற்று பண்ட்வால் வட்டத்தின் மூலார்பட்டனா, விட்லபண்டூரு, கணியூர், கல்லஜே, சுப்ரமணியா, குண்டியா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேதங்களை மதிப்பிட்டனர்.

    இந்த இரு குழுவினரும் இன்று பெங்களூருவுக்கு வந்து முதல்-அமைச்சர் குமாரசாமி, தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வெள்ளச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு புதுடெல்லி திரும்பும் இக்குழுவினர், வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க இருக்கிறார்கள்.

    அதன் அடிப்படையில் வெள்ள நிவாரண உதவிகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.1,190 கோடி நிவாரண நிதி உதவியை மத்திய அரசிடம் கர்நாடக அரசு கேட்டு இருக்கிறது. #SouthWestMonsoon #KeralaRains #CMKumaraswamy

    நில முறைகேடு தொடர்பான வழக்கில் கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kumaraswamy #LandCheating

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தனிசந்தரா என்ற இடத்தில் பெங்களூரு வளர்ச்சி குழுமம் சார்பில் வீட்டு மனை உருவாக்கப்பட்டது.

    இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு அதில் 3.9 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அப்போது குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

    இதில், தனி நபருக்கு சாதகமாக அரசு முடிவு எடுத்திருப்பதாக புகார் கூறப்பட்டது. குமாரசாமி மற்றும் சில அதிகாரிகள், முன்னாள் மந்திரி ஆகியோர் இதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் வந்தன.

    இது சம்பந்தமாக மகா தேவசாமி என்பவர் 2011-ம் ஆண்டு லோக் அயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்தது.

    இதில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று குமாரசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இதை விசாரித்த நீதிபதி பி.வி.பட்டேல், முதல்-மந்திரி குமாரசாமி, அப்போதைய மந்திரி சென்னிகப்பா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதி ராமலிங்கம் உள்ளிட்டோரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக தொடரப்பட்டுள்ளது. மேலும் குமாரசாமி உள்ளிட்டோர் முறைகேடு செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. விதி முறைகளை மீறியதற்கான ஆவணங்களும் தாக்கல் ஆகவில்லை.

    எனவே, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என்று நீதிபதி கூறினார்.

    கர்நாடக அரசில் உயர்கல்வித் துறை மந்திரியின் படிப்பு தொடர்பான அதிருப்திக்கு விளக்கம் அளித்துள்ள முதல்வர் குமாரசாமி நான் மட்டும் என்ன படித்து விட்டேன்? என கேட்டுள்ளார். #Kumaraswamy #highereducationportfolio #class8passminister
    பெங்களூரு:

    கர்நாடக மாநில மந்திரிசபையில் கடந்த 6-ம் தேதி 25 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்த மந்திரிசபையில் உயர்கல்வித்துறை மந்திரியாக ஜி.டி. தேவேகவுடா (முன்னாள் பிரதமர் எச்.டி. தேவேகவுடா அல்ல) நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் முதல் மந்திரி சித்தராமைய்யாவை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரான ஜி.டி. தேவேகவுடா, எட்டாம் வகுப்பு வரை படித்தவர் என்பதால் கல்வித்துறை சார்பில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய உயர்கல்வித்துறை மந்திரி பதவியை இவருக்கு அளித்தது தொடர்பாக முதல் மந்திரி குமாரசாமி கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குமாரசாமி, ‘நான் மட்டும் என்ன படித்து விட்டேன்? நான் முதல் மந்திரியாகவில்லையா? (குமாரசாமி பி.எஸ்.சி. பட்டதாரி) அதுபோல், சிலருக்கு சில துறைகளில் பணியாற்ற விருப்பம் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு துறையிலும் திறமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதில் நமது திறமையை நாம் வெளிப்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Kumaraswamy #highereducationportfolio #class8passminister 
    ×