search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வருக்கு நன்றி"

    • முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
    • கட்டணமில்லா பேருந்து சேவையில் 3.53 கோடி பேர் பயணம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரசு நகரப் பேருந்துகளில் இது வரை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் 3.53 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 அரசுப் போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 420 பேருந்துகள் 564 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு நாளைக்கு 2.65 லட்சம் பயணிகள் சராசரியாக பயணம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 398 மாற்றுத்திறனாளிகள், 15 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 20 திருநங்கைகள் என சராசரியாக 86,340 பேர் வீதம் இதுவரை 3.53 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ள பட்டுள்ளனர்.

    குறிப்பாக மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையும் பேருந்தின் முகப்பில் ஒட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினந்தோறும் கூலி வேலை, பணிநிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்திட்டம் பேருதவியாக உள்ளதால் பெண்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தின் கீழ் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரி டம் கனிவுடனும், பேருந்து நிறுத்தத்தில் எத்தனை பெண்கள் காத்திருந்தாலும் அவர்களை நிறுத்தி பேருந்தில் ஏற்றவும் பேருந்து நடத்துனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் அனைவரும் நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்து கொண்டனர் என கலெக்டர் தெரிவித்தார்.

    • திருச்சி மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசு மாடுகள் பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
    • இந்த பசுகளை கொண்டு நாங்கள் பால் விற்று எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள பசுமை நிறைந்த, இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியே பச்சைமலை ஆகும். இங்கு துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வண்ணாடு, கோம்பை ஊராட்சியும், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த தென்புறநாடு ஊராட்சியும் என மொத்தம் 3 ஊராட்சிகள் உள்ளன. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும் இந்த மலைசூழ் பகுதியில் பழங்குடியின மக்களே அதிகளவில் வசிக்கின்றனர்.

    மரவள்ளிக் கிழங்கு, முந்திரி, நெல், பலா இவற்றின் மூலம் வருகின்ற வருமானமே இவர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இந்நிலையில் இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி பொருளாதாரத்தைப் பெருக்குகின்ற வகையில், ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இங்குள்ள மக்களுக்கு கறவைப் பசுக்கள் வழங்குதல், உழவுக்கு காளை மாடுகள் வழங்குதல், முந்திரியினை பதப்படுத்தி நல்ல விலைக்கு விற்றிட ஏற்பாடு செய்தல், தேனீ வளர்ப்பினை ஊக்குவித்து தேன் உற்பத்தியின் மூலம் தனி அடையாளத்தைக் கொண்ட தேனை விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் 10 ஆயிரம் தேனீப் பெட்டிகள் வழங்குதல்,

    மரவள்ளிக் கிழங்கினை நல்ல முறையில் சந்தைப் படுத்துதல், மிளகு பயிரிடுதல், மிளகாய், காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் உற்பத்தி செய்து தனி அடையாளத்துடன் சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

    இதன் முதற்கட்டமாக, பச்சை மலையில் வாழும் பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலுக்கு காணிக்கையாகவும், நேர்த்திக்கடனாகவும் வரப்பெற்ற மாடுகளை வழங்கி, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தித் திட்டத்தினை திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கடந்த 27-ந்தேதி தொடங்கி வைத்தனர்.

    47 பயனாளிகளுக்கு பசுவும் கன்றும் என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுமாடும், 5 பயனாளிகளுக்கு தலா 2 காளை மாடுகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    பசுமாட்டினைப் பெற்ற டாப்செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த இந்திரா தெரிக்கையில், எனது பெயர் இந்திரா, எனது கணவர் பெயர் குமார். நாங்கள் பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் வசித்து வருகிறோம்.

    நாங்கள் மலைவாழ் மக்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    என்னுடைய குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்து எனது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றேன். தமிழக முதலமைச்சர் மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படையச் செய்திடும் வகையில் இத்திட்டத்தினால் எங்களுக்கு பசுமாடு கிடைத்துள்ளது.

    இந்த பசுகளை கொண்டு நாங்கள் பால் விற்று எங்கள் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைப்போம். தமிழக முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

    பச்சமலையைச் சேர்ந்த முத்துலெட்சுமி கூறுகையில், எனது பெயர் முத்துலெட்சுமி, எனது கணவர் பெயர் சரவணன். நாங்கள் வேலைக்குச் செல்பவர்கள். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் வயலில் வேலைபார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கிறார்கள். எங்கள் குடும்பம் மிகவும் ஏழைக்குடும்பம்.

    நாங்கள் மலைப்பகுதியில் வசிப்பதால் வெளியில் சென்று வேலைபார்க்கும் சூழ்நிலை இல்லை.

    விவசாயத்தையே நம்பி ஜீவனம் செய்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வழங்கிய பசு மாடுகள் எங்கள் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு மலைவாழ் மக்களின் சார்பாகவும் எனது குடும்பத்தினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

    ×