search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை குழம்பு"

    தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மலபார் முட்டை கறி. இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6,
    வெங்காயம் - 2,
    இஞ்சி - சிறிய துண்டு,
    தக்காளி - 2,
    ப. மிளகாய் - 4,
    பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
    மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி,
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி,
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி,
    முதல் தேங்காய் பால் - ஒரு கப்,
    இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்,
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
    கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

    கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.

    சுவையான மலபார் முட்டை கறி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    முட்டை - 4
    உருளைக்கிழங்கு - 1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
    மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 100 கிராம்

    அரைக்க

    இஞ்சி - 1/2 இன்ச் அளவு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி 

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    வெங்காயம் - 1/4 பங்கு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை  :

    உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

    அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.

    அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×