search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகம் பொலிவு பெற"

    • பெண்கள் அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
    • கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும்.

    பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

     கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

    கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.

    தூக்கமின்மை, அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பது, போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, கவலை, மனஅழுத்தம், காபி அதிகம் குடிப்பது, சூரிய ஒளியில் அதிகம் இருப்பது, கண்களை நன்றாக அழுத்தி கசக்குவது, தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவைகளே முக்கியமான காரணங்கள். இதனை எளிமையாக வீட்டில் இருக்கும் பொருளை கொண்டே நீக்கி விடலாம்.

     கருவளையத்தை நீக்க சில டிப்ஸ்:

    * முதலில் ஒரு ஐஸ்கட்டியை எடுத்துக் கொண்டு அதனை மென்மையாக கண்களில் உள்ள கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்து வரலாம். இதனை தினமும் 2 முறை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    * கிரீன் டீ பேக் இருந்தால் அதனை எடுத்து சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து கண்களுக்கு மேலே 10 நிமிடங்கள் வைக்கலாம்.

    * புதினா அழகை பராமரிக்க உதவும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால் புதினா இலைகளை அரைத்து அந்த சாறை கருவளையத்தின் மீது 10 நிமிடம் வைக்கலாம்.

    * காய்ச்சாத பால் இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன், பன்னீர் 2 டீஸ்பூன் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காட்டன் பஞ்சை வைத்து ஊற வைக்கவும். பின்னர் அந்த பஞ்சுகளை 20 நிமிடம் கண்களுக்கு மேலே வைத்தால் போதும்.

    * ஒரு தக்காளியை பிழிந்து நன்கு சாறு எடுத்து கொள்ளுங்கள், அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அதனுடன் 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை கருவளையத்தில் போட்டு 15 நிமிடங்கள் வைத்து காய்ந்த பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

    • கெமோமில் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராகும்.
    • அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முதுமை பயணத்தின் தொடக்கத்திலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்படத் தொடங்கிவிடும். இது இயற்கை என்றாலும் மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தில் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது 30-களின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பார்க்கலாம். சரும வறட்சியை சரிசெய்ய சில டிப்ஸ்கள்.

    * சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

    * தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.

    * தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பிறகு கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்காலம்.

     கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம். கேரட், பீட்ரூட் சாறு தடவி வரலாம். இதோடு கடலை மாவு கலந்து பேஸ்ட்போல செய்து ஃபேஸ் பேக் போடலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.

    * வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

     * ஆர்கன் ஆயில் என்று ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

    * தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளதாலும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமி நாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இ எண்ணெய் உள்ளிட்டவற்றையும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

    முகப்பரு மற்றும் எக்சிமாவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.

    எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தாலாம்.

    கெமோமில் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். முகம் பொலிவாக இருப்பதற்கும் இது உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம். இதோடு, கெமோமில் டீ குடிப்பதும் உடல்நலனுக்கு நல்லது.

    சருமத்தை ஆரொக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

    • முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது.
    • எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது.

    சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத தவறுகள் நிறைய இருக்கின்றது. அதில் சில தவறுகள் இங்கே உங்களுக்காக...

    * வெந்நீரில் குளிப்பது நல்லது தான் ஆனாலும், கூந்தலை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது கூந்தலில் உள்ள வேர்களை பாதிப்பதோடு, பலவீனமாக்கும்.

    * மேல் உதடு, தாடையில் ரோம வளர்ச்சி ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால் ஏற்படக்கூடும். அது அழகு பிரச்சினை இல்ல, ஆரோக்கியப் பிரச்சினை என்று புரிந்துகொண்டு டாக்டரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

    * உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சருமத்துக்கு இயற்கையாகவே அழகு கிடைக்கும்.

    * நீங்கள் பயன்படுத்தும் துண்டை மூன்று நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணை உறைகளை ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றணும். ஏன்னா, இதில் எல்லாம் இருக்கும் நுண்ணுயிர்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    * முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்கு கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாகத்தான் கையாள வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினால் போதுமானது.

    * எந்த காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அப்படி செய்தால் பரு போகாது. அதனுள் இருக்குற நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்று பாதிப்புகளை அதிகமாக்கவே செய்யும்.

    * உறங்கச் செல்லும் முன்பு மேக்கப் ரிமூவ் செய்றதுல சோம்பேறித்தனம் கூடவே கூடாது. மேக்கப் உடன் தூங்கினால் சருமத்துக்கு பல மடங்கு வேகமாக வயசான தோற்றத்தை அளிக்கும் என்று கூறுகிறார்கள் சரும நிபுணர்கள்.

    * ரசாயனங்களால் ஆன பிளீச்... அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக தேன், உருளைக்கிழங்கு, தயிர் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

    * சில யூடியூப் வீடியோக்களில `ஸ்கின் வொயிட்டனிங்க்கு பேக்கிங் சோடா'னு பார்த்துட்டு, அதை டிரை செய்யக்கூடாது. சோடா சருமத்தை அதிகமாக உலரச் செய்யும். எனவே முகத்தில் பருக்கள், அரிப்பு, வீக்கம் என்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

    * தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் முடியின்வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால் அதை தவிர்ப்பதே நல்லது.

    இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும், ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு... ஒரு விஷயத்தைப் செய்தால் கிடைத்துவிடும். அது தான், சத்தான உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணி குடிக்க வேண்டும். அதுதான் குளோயிங் ஸ்கின்னுக்கான ஓப்பன் சீக்ரெட்...!

    • முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான்.
    • கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.

    முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான். வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்பது தவறான கருத்து. முகம் எப்போதும் பொலிவாக இருக்கவும், பார்த்தவுடனேயே பளீச்சென்று இருப்பதற்கு நிறைய கிரீம், பவுடர் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    நம்ம வீடுகளில், இருக்கின்ற சில பொருட்களை கொண்டு எளிமையான முறையில் நம்மை நாம் பராமரிக்கலாம். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படி தெருவுக்கு தெரு பார்லர்கள் இல்லையே. அனைவரும் வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டே பெண்கள் தங்களை அழகுபடுத்தி வந்தனர்.

    கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் கடலைமாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வறண்ட சருமத்திற்கு கடலைமாவுடன் வாழைப்பழம், கற்றாலை ஜெல் பயன்படுத்தலாம். அல்லது சென்சிட்டிவ் ஸ்கின் என்றால் கடலைமாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துகொள்ளலாம். ஆயில் சருமம் என்றால் கடலை மாவுடன் டீ டிக்காசன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சாதாரண சருமத்திற்கு பாதாம் ஆயில், முல்தானிமெட்டி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கும் பெரிய பிரச்சினையே முகத்தில் உள்ள முகப்பருக்கள் தான். முகப்பருக்கள் நிறைய இருப்பவர்கள் கடலைமாவினை கிரீன் டீயில் கரைத்து அதை முகத்தில் பேக்காக போட்டு வந்தால் நாளடைவில் முகப்பருவில் இருந்தும், அதனால் ஏற்படக்கூடிய தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். இந்த பேக்கை போட்டு வெதுவெதுப்பான நீரில் ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பளீச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வினை கொடுக்கும்.

    ×