search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள் விற்பனை"

    • மீன்கள் வாங்க பொதுமக்கள் குறைந்தளவே வந்திருந்தனர்
    • புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சிகளின் விற்பனை மந்தமாக உள்ளது

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்றஇடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது.

    வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன்கள் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடை பெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. புரட்டாசி மாதம் என்பதால் மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விற்பனை மந்தமாக உள்ளது.

    இதன் எதிரொலியாக மீன்கள் விற்பனையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மீன் மார்கெட்டில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மீன்களின் விலையில் சரிவு காணப்பட்டது. அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்றது.

    சீலா கிலோ ரூ.350, தேங்காய்பாறைகிலோ ரூ.450. இறால் கிலோ ரூ.350 முதல் ரூ.550 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்றது. சங்கரா ரூ.150 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ. 200-க்கும், கட்லா ரூ. 120-க்கும், மத்தி ரூ.120-க்கும். மத்தி ரூ.140, வவ்வால் ரூ.450-க்கும், டேம்வவ் வால் ரூ.150-க்கும், அயிலா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 300 விசைப்படகுகள் கரை திரும்பின.
    • காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் களை கட்டி இருந்தது.

    ராயபுரம்:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தது. 61 நாட்கள் தடைகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி இரவு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    கடந்த வாரம் தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக் கிழமையில் குறைந்த அளவு விசைப்படகுகள் மட்டுமே கரை திரும்பின. இதனால் எதிர்பார்த்த அளவு பெரிய மீன் வரத்து இல்லை. மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு கரைதிரும்புவது வழக்கம். எனவே தடை காலம் முடிந்து 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரிய அளவிலான மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 300 விசைப்படகுகள் கரை திரும்பின. கடந்த வாரத்தை விட பெரிய அளவிலான மீன்கள் அதிக அளவு சிக்கி இருந்ததால் அவை விற்பனைக்காக குவிந்து இருந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் குவிந்தனர். மேலும் கடந்தவாரத்தை விட மீன்களின் விலை குறைவாகவே இருந்ததால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு பெரிய வகை மீன்களை வாங்கிச்சென்றனர்.

    கடந்த வாரம் கிலோ ரூ.1400 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ரூ.1100-க்கு விற்கப்பட்டது.இதேபோல் ரூ.800-க்கு விற்கப்பட்ட வவ்வால் தற்போது ரூ. 550-க்கும், ரூ. 600-க்கு விற்ற பெரிய வகைசங்கரா ரூ. 400-க்கும் விற்கப்பட்டது.

    காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் களை கட்டி இருந்தது. மீன் விற்பனை ஜோராக நடைபெற்றது. இதனால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மீன்வியா பாரிகள் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடி தடை காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்த எங்களுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை மகிழ்ச்சியை கொடுத்தது. பெரிய வகை மீன்கள் அதிகளவு கிடைத்து இருந்தது. மீன்களின் விலையும் குறைந்து இருந்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றனர்.

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்களின் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    வஞ்சிரம்- ரூ.1100, பர்லா - ரூ.380, சங்கரா-ரூ.400, தோல் பாறை -ரூ.300, தேங்காய் பாறை -ரூ.700, கடம்பா- ரூ.280, நெத்திலி- ரூ.100

    வெள்ளை ஊடான்-ரூ.100, இறால், ரூ.350நண்டு-ரூ.300.

    ×