search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் மறியல்"

    • கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
    • பொம்மையார்பாளையம் மீனவ கிராமம் வரை தான் செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் பயனடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி பிள்ளைசாவடி, கோட்டக்குப்பம், நடுகுப்பம், தந்திரியான்குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரை ஓரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் வசிக்கக்கூடிய மீனவர்களின் வீடுகள் மற்றும் படகு நிறுத்தும் இடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. இதனை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் நலனுக்காக அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் மூலம் கடற்கரை ஓரங்களில் கருங்கற்களை கொட்டி மண்ணரிப்பை தடுத்தனர். இந்த திட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமம் வரை தான் செயல்படுத்தப்பட்டு மீனவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் அதனை அடுத்துள்ள பிள்ளைசாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பிள்ளைசாவடி மீனவர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் 3 முறை சாலை மறியல் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

    ஆத்திரமடைந்த பிள்ளைசாவடி மீனவ பொதுமக்கள் ஆண் பெண் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுவையில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை பிள்ளை சாவடி மெயின் ரோட்டில் திடிரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் மற்றும் வானூர் தாசில்தார் கோவத்தனன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில் எங்களது பகுதியில் கடல் சீற்றத்தால் மன்னரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரமிருந்த வீடுகள் படகு நிறுத்துமிடம் அனைத்தும் சேதம் ஆனது. அதனால் எங்களது பகுதியில் அரசு சார்பில் தூண்டில் வளைவு திட்டம் செயல்படுத்தப்பட்டு கடற்கரை ஓரங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்கு கற்களை கொட்டி மண்ணரிப்பை தடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் முன்னிலையில் வானூர் தாசில்தார் மற்றும் உரிய அதிகாரிகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உத்தரவு அளித்ததின் பெயரில் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. திடீரென்று 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த இடம் பரபரப்பாக இருந்தது. 

    ×