search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் கைது"

    • சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர்

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 67). இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது வீட்டருகே குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் அந்தோணியார் குருசடி உள்ளது.

    இதில் சுமார் 3½, 2½ மற்றும் ஒரு அடி உயரத்தில் அந்தோணியார் சிலைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குருசடி பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. உடனே பெஞ்சமின் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு பெரியவிளையை சேர்ந்த வின்சென்ட் மகன் ஸ்டாலின் (43) அங்கிருந்த 2½ மற்றும் ஒரு அடி உயர சிலைகளை உடைத்து சேதப்படுத்தி, அங்கு வைத்திருந்த உண்டியலையும் பணத்துடன் எடுத்துச் சென்று விட்டான். இதுகுறித்து பெஞ்சமின் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்தனர். போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் அருகே மணலில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • கடத்தல்காரர்கள் போலீசுக்கு பயந்து கடலில் வீசிச்சென்ற கஞ்சா பொட்டலங்கள் எனது வலையில் சிக்கின.

    ராமேசுவரம்:

    இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக ராமேசுவரம் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கடலில் வீசப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மீனவர் ஒருவர் மீட்டு பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் அருகே மணலில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், பெரிய பள்ளிவாசல் தெருப்பகுதியைச் சேர்ந்த ஜெனதன் (வயது 40) என்ற மீனவர் கஞ்சா பார்சல்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கஞ்சாவை மறைத்து வைத்த ஜெனதனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை ராமேசுவரம் கோவில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது மீன்பிடி வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சாவை மீட்டு வந்து பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக ஜெனதன் கூறும்போது, கடந்த 16-ந்தேதி விசைப்படகில் சென்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது கடத்தல்காரர்கள் போலீசுக்கு பயந்து கடலில் வீசிச்சென்ற கஞ்சா பொட்டலங்கள் எனது வலையில் சிக்கின. அதனை எடுத்துவந்து ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் விற்பனைக்கு கொடுத்தேன் என்று தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×